தமிழ்நாட்டில் பல SIRகள்! அட்டாக்கை ஆரம்பித்த எடப்பாடி!

Advertisements

சிறுமிகள் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வௌயிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது,

சென்னை திரு.வி.க. நகர் பகுதியில் 3 சிறுமிகளை 3 நபர்கள் காதலிப்பதாகக் கூறி, மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று, சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இவ்வழக்கில் குற்றம் செய்ததாக மூவரும், உடந்தையாக இருந்ததாக மூவரும் கைதாகியுள்ள நிலையில், கைதானோரில் சிலர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதாகச் செய்திகள் வருகின்றன.

சட்டங்களைக் கடுமையாக்குவதாகச் சொன்னால் மட்டும் போதாது; அவற்றைச் செயல்பாட்டில் கொண்டு வந்தால் தான் குற்றவாளிகளுக்குக் குற்றம் செய்வதற்கு அச்சம் ஏற்படும் என்பதை ஸ்டாலின் மாடல் திமுக அரசு உணர வேண்டும்.

“SIR” போன்றவர்களை ஆட்சியாளர்கள் காப்பாற்ற முனைவதால் தான், தமிழ்நாட்டில் பல “SIR”கள், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருகின்றனர். இது கண்டனத்திற்குரியது.

இவ்வழக்கை தீர விசாரித்து, குற்றவாளிகள்மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *