Maharashtra:இனி 20 மார்க் எடுத்தாலே பாஸ்.. மாஸ் காட்டிய மகாராஷ்டிர அரசு!

Advertisements

100 மதிப்பெண்களுக்கு 35 என்பது குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்காளாகத் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்தக் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களை 20 ஆகக் குறைக்க மகாராஷ்டிர அரசு முடிவெடுத்துள்ளது.

அம்மாநிலத்தில் நிறைய மாணவர்கள் 35 மதிப்பெண்கள் கூட எடுக்க முடியாமல் திணறுவதால் தேர்ச்சிபெறுவோர் விகிதம் குறைந்தவண்ணம் உள்ளது. பரீட்சையில் தோல்வியடைந்த மாணவர்கள் 10 ஆம் வகுப்புக்குப் பிறகு கல்வியை கைவிடுகிறனர். எனவே மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளது.

இதைச் சரிசெய்யும் வகையில் 10 ஆம் வகுப்பு கணிதம் மற்றும் அறிவியல் பாடத்திற்கான தேர்ச்சி மதிப்பெண்களை 35-ல் இருந்து 20ஆகக் குறைக்க மகாராஷ்டிர பள்ளிக்கல்வித் துறை முடிவெடுத்துள்ளது. ஆனாலும் இதன்படி அந்த மாணவர்களால் தொடர்ந்து கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த உயர் படிப்புகளைப் படிக்க முடியாது.

கலை, மானுடவியல் சார்ந்த படிப்புகளையே உயர்கல்வியில் அவர்கள் தேர்வு செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் அமலுக்கு வரும்போது இந்த நடைமுறை செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதற்கிடையே இந்த முடிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *