தூத்துக்குடி மாவட்டத்தில ஏற்பட்ட இந்த துயரச் சம்பவம் தமிழகத்திற்கு தூது சென்று தாயின் செவிகளெல்லாம் இன்று இந்த செய்தியை கேட்டு அய்யோ அம்மா என்று இப்படி ஒரு கொடூரமா என்று அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கம் மணம் உண்டு என்பார்களே இந்த சாதி வெறி பீடையை என்று தமிழகத்தை விட்ட தகர்த்து ஏறிய போகிறார்களோ தெரியவில்லையே பிறர் மனம் அறியாமல் சாதி வெறி ரத்தத்திற்குகேறி இனம் கொண்ட சிலர் இப்படி செய்த சம்பவம் தான் அது
கயத்தாறு அருகே மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் மல்லிகை மொட்டு சற்று துளிர்விட்டு எட்டிப் பார்க்கையிலே காதலித்த இளம்பெண் ஒருவரை, அவரது சொந்த அண்ணனே ஆணவக்கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வெளிவந்துள்ளது. கயத்தாறு பகுதியைச் சேர்ந்த குடும்பத்ததின் அன்பு மகள் அபிசெல்வி என்ற இளம்பெண், புனித காசியிலே ஓடுகின்ற நீ புனிதமானதா இல்லை அதிலும் ஓடுகின்றதே நாற்றத்தை தூக்கும் சாதி சாக்கடையிலே. இருந்தாலும் நீங்கள் முக்கி எழுவதல்லவா.
அதுபோன்று வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைத் தீவிரமாகக் காதலித்து வந்தவளளை இப்படி இறைவன் பறித்துகொள்வதற்கு முன்பே சாதி பெயரைச் சொல்லி அவள் உயிரை பறித்துக்கொண்டது ஏனோ இறைவா என்கிறார்கள் இத்தகைய இச்செய்தி அறிந்தவர்கள் இவர்களது காதல் விவகாரம் குடும்பத்தினருக்குத் தெரியவந்ததை அடுத்து, அபிசெல்வியின் அண்ணன் சிவஞானம். பெயரிலே ஞானம் கொண்டவனே தவிர சாதி வெறியால் மூளை மழுங்கி ஞானமற்றவனே என்றே சொல்லாம்
மற்றும் அவரது தாயார் எஸ்தர் பாலின் தான் பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளையை பொத்தி பொத்தி கைக்குள்ளே வைத்து வளர்த்த பிள்ளையை உயிரற்ற ஒரு மத வெறிக்கு அவரே காவ கொடுத்திருக்கிறார். இந்த காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். மேலும், காதலைக் கைவிடுமாறு அபிசெல்வியை அவர்கள் பலமுறை வற்புறுத்தியும், எச்சரித்தும் வந்ததாகக் கூறப்படுகிறது.
அவள் குழந்தையா இருந்தாள் பராவலையே திட்டி அடித்து சொன்னால் கேட்டுக்கொள்வாள்.ஆனால் ஆவளோ பிஞ்சு பருவத்தை தாண்டி மடந்தை பருவத்தை தொட்டு தன் மணவளானை தேடியிருக்கிறாள்.துள்ளாத மனமும் துள்ளும் இந்த கலியுலகத்திலே இப்படி துள்ளிய அவளுள் எழுந்த காதலை அதுவும்
ஆழ்ந்த காதலிலே இருக்கும்போது தன் அன்னையே நேரில் வந்து சொன்னாலும் செவி அதற்கு ஈடுகொடுக்காது என்பதுபோல் குடும்பத்தினரின் தொடர் எதிர்ப்புகளையும், கடுமையான எச்சரிக்கைகளையும் மீறி அபிசெல்வி தனது காதலில் ஆலமரத்தை போல ஆழமாகவும், உறுதியாகவும் இருந்துள்ளார்.
ஆலமரத்தில் கூட அவ்வப்போது இலைகள் உதிர்வது உண்டு அதுபோல இந்த காதலில் சில பெற்றோருக்கு தவறுகள் செய்திருக்கலாம். ஆனால் அதற்காக உதிரத்தை சாதிக்கு உரமாக்கவதா
இதனால் ஆத்திரமடைந்த அண்ணன் சிவஞானம், இளம் பிஞ்சு துளிர்விடுவதற்குள் தன் உடன்பிறந்த தங்கை என்றும் பாராமல் அபிசெல்வியை கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்துள்ளார். இக்கொலைச் சம்பவத்திற்குப் பிறகு, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காகவும், ஊர் பொதுமக்களை நம்ப வைப்பதற்காகவும் தாயியும் மகனும் ஒரு அரிச்சந்திர நாடகத்தை அரங்கேற்றினார்களே ஆகாகா ஓகாகோ
நாடகத்தில் தோல்வியுற்றவர்கள் அவர்கள் என்றே அறியாமல், தான் மனிதன் நிலையை மறந்து ஜாதியிக்கு அடிமையாகிருக்கிறார்கள். தோல்லி அடைந்து உடல்கள் மட்டுமே தவிர காதல் அல்ல. ஆனால் வெற்றி கண்டவன் சாதியாயி இருப்பினும் அவனுக்கு நிச்சயம் ஒருநாள் சமாதி கிடைக்கம் என்கிறார்கள் இந்த பொய் விஷம் குடித்த செய்தியறிந்தவர்கள்
அந்த வயதில் விஷம் எதுவென்று அறியாதவள் அபிசெல்வி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, அவரது உடலை அவசர அவசரமாக மறைக்க முயன்றுள்ளனர். இருப்பினும், இந்த மரணத்தில் தனது மூளைக்கு எட்டப்படாத எட்டப்பன் யாரா இருக்கிறார்கள் என்று இந்த மரணத்தில்
சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் சிங்க காவலர்கள் காதல் களம் விவகாரத்தில் களமிறங்கினார்கள் காவல்துறையினரின் அதிரடி மற்றும் கிடுக்கிப்பிடி, கொக்கிப்பிடி போன்ற
விசாரணையில், அது தற்கொலை அல்ல. கொசு வலை போட்டு யாரோ கொன்றுறிருக்கிறார்கள், திட்டமிட்டு நடத்தப்பட்ட ஆணவக்கொலை என்பது அம்பலமானது என்று உரக்கச் சொல்லிருக்கிறார் உலகம் முழுவதும் சாதிகள் இல்லையடி பாப்பா. குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்றெல்லாம் பாரதி தன் எழுத்தாலும், நாவாலும் சொல்லியும் இந்த பாரத மக்கள் திருந்தவில்லையே என்பதற்கு உதாரணம் தான் இந்த கொலை சம்பவம்
இதையடுத்து, கொலைக் குற்றவாளியான அண்ணன் சிவஞானம் மற்றும் இந்த கொடூரத்திற்கு உடந்தையாக இருந்த தாயார் எஸ்தர் பாலின் ஆகிய இருவரையும் காவல்துறையினர் முறைப்படி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காதலித்த காரணத்திற்காகப் பெற்ற மகளையும், உடன்பிறந்த தங்கையையும் குடும்பத்தினரே படுகொலை செய்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் மட்டும் மல்ல பாரத தமிழ் மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஆழ்ந்த துயர்த்தில் ஆழ்த்தியுள்ளது.
நீ கடையில் திண்கின்ற பண்டம் எந்த சாதியினர் செய்தான் என்று நீ அறிந்தாயோ இல்லலை தெரிந்துதான் இந்த கொலை சம்பவத்தை செய்தாயோ
தொண்டையை தாகம் அடைத்தபோது உற்ற சமயத்தில் தண்ணீர் தனதுக்கு தந்தானே அப்போது அவன் எந்த மதத்தினர் என்று நீ அறிந்தாயோ இல்லை நீ தண்ணீரை அருந்தினாயோ
நம்மை காக்கின்ற கடவுள் நீ தினம் தினம் வேண்டுகின்ற இறைவன் எந்த சாதி என்று நினைத்தயோ இல்லை தனக்கு எந்த வரமும் வேண்டாம் என்று கும்பிடாமல் சென்றாயோ
சதியினில் வெற்றிக் கண்டுறிருக்கின்ற இந்த சாதி சம்பவம், சட்ட விதிகளின் மூலம் வேறொடு சாய்க்கப்டுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்