Advertisements

ஆஸ்திரேலியா ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி
முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியா ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.
இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, தைவானின் லீ சியா ஹோ உடன் மோதினார்.
இந்தப் போட்டியில், சிறப்பாக விளையாடிய ஸ்ரீகாந்த் கிடாம்பி 21-19, 19-21, 21-15 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
Advertisements



