Kurinjipadi: படு ஜோராக நடந்த கஞ்சா விற்பனை!

Advertisements

குறிஞ்சிப்பாடி அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து  விற்பனை செய்துவந்த இரண்டு வாலிபர்களை போலிசார் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு கிலோ மதிப்பான கஞ்சா பொட்டலங்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி  பகுதியில் நெய்வேலி சரக குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது கு.நெல்லிக்குப்பம் ஏரி அருகே 2 வாலிபர் இருசக்கர வாகனத்துடன் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்தனர்.

அவர்களை பிடித்து  விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கு.நெல்லிக்குப்பம் சின்ன ஏரி கரை அருகே உள்ள எருக்கஞ்செடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

பின்னர் அவர்களை பிடித்த குற்றப்பிரிவு போலீசார்  குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் குறிஞ்சிப்பாடி காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் பாச்சாரப்பாளையம் மேல தெரு பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் வயது(24)மற்றும் மீனாட்சி பேட்டை சிங்கபுரி வள்ளலார் நகர்  பகுதியை சேர்ந்த கார்த்திக் என்கிற தமிழரசன் வயது (26) எனவும்  இவர்கள் கஞ்சா பொட்டலங்களை கு.நெல்லிகுப்பம் ஏரி கரை அருகே மறைத்து வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

அவர்களிடமிருந்து சுமார் 2 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள்மற்றும் கஞ்சா விற்பனை செய்ய பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த குறிஞ்சிப்பாடி காவல்துறையினர்  நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

குறிஞ்சிப்பாடி பகுதியில் வாலிபர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *