
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சூர்யா நடிப்பில் கடந்த மே 15 அன்று உலகம் முழுவதும் வெளியான ‘கருப்பு’ திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்து வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான இத்திரைப்படம், ரசிகர்களிடையே அசுர வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
நீதிமன்ற வழக்கு ஒன்றை மையக்கதைக்களமாகக் கொண்டு, அதனுடன் கடவுள் நம்பிக்கை மற்றும் ஆன்மீகக் கூறுகளை நேர்த்தியாக இணைத்து இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. வெளியீட்டிற்கு முன்பாகப் பல்வேறு தடைகளையும் சட்டப் போராட்டங்களையும் சந்தித்த ‘கருப்பு’, தற்போது அனைத்தையும் கடந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நடிகர் சூர்யாவிற்கு ஒரு மிக வலுவான ‘மரண மாஸ்’ கம்பேக் திரைப்படமாக அமைந்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ 3 நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. படம் வெளியான மூன்றே நாட்களில் உலகளவில் சுமார் ரூ.120.75 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
உலகளாவிய மொத்த வசூல்: ரூ.120.75 கோடி
இந்திய வசூல் மட்டும்: சுமார் ரூ.78 கோடி
இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக முன்னணி நடிகை திரிஷா நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே முக்கியக் கதாபாத்திரங்களில் தங்களின் பங்களிப்பை வழங்கியுள்ளனர். ‘அடிபொலி’ புகழ் சாய் அபயங்கரின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்குப் கூடுதல் பலம் சேர்த்துள்ளன. திரையரங்குகளில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறியுள்ளதால், வரும் நாட்களில் ‘கருப்பு’ திரைப்படத்தின் வசூல் மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என வர்த்தகப் பகுப்பாய்வாளர்கள் கணித்துள்ளனர்.



