Advertisements

தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமுமான விஜயின் கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’, திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகத் தயாராகியுள்ளது. இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21 அன்று ‘ஜீ5’ (Zee5) ஓடிடி தளத்தில் அதிகாரப்பூர்வமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் பல்வேறு தடைகளைத் தாண்டி கடந்த ஜூலை 23 அன்று வெளியான ‘ஜன நாயகன்’, பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. சாக்னில்க் தகவலின்படி, இந்தியாவில் மட்டும் ரூ.227.14 கோடியும், உலகளவில் ரூ.320.34 கோடியும் வசூலித்து இப்படம் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது.
கே.வி.என் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட் கே நாராயணா தயாரித்துள்ள இப்படத்தில், விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி மற்றும் நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் விவேக் வரிகளில் உருவான ‘தளபதி கச்சேரி’ போன்ற பாடல்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றன.
கடந்த ஏப்ரல் 2026-இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜயின், திரையுலகப் பயணத்தின் கடைசித் திரைப்படமாக ‘ஜன நாயகன்’ அமைந்துள்ளது. வழக்கமான துடிப்பான நடனம், சுவாரஸ்யமான சண்டைக்காட்சிகள் மற்றும் மாஸ் நடிப்பால் ரசிகர்களை நெகிழ வைத்துள்ள இத்திரைப்படம், தற்போது ஓடிடி தளத்திற்கு வருவது விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisements



