
எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலக வளாகத்தில் கார்ல் மார்க்ஸின் பிரம்மாண்டமான வெண்கலச் சிலையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலக வளாகத்தில் கார்ல் மார்க்ஸின் பிரம்மாண்டமான வெண்கலச் சிலையை இன்று காலை 10 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உலக வரலாற்றில் மிக முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவர் என்றும் பலர் வரலாற்றுக்கு சேவை செய்தனர் ஆனால் சிலரே வரலாற்றின் போக்கை மாற்றியவர் என்றும் தெரிவித்தார். கார்ல் மார்க்ஸ் அதில் ஒருவர் என்றும் அவர் உலகெங்கும் புரட்சிகளுக்கு அடித்தளமிட்டவர் என்றும் புகழாரம் சூட்டினார்.


