
காரைக்காலில் உள்ள காரைக்காலம்மையார் மணிமண்டபத்தில் முதல்முறையாக வருகை தந்த சோம்நாத் ஜோதிர்லிங்கத்திற்கு ருத்ர பூஜை நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள காரைக்காலம்மையார் மணிமண்டபத்தில் சோம்நாத் ஜோதிர்லிங்கத்திற்கு ருத்ர பூஜை நடைபெற்றது. இதில்,சுவாமி ஸ்ரீதேஜ், ஜோதிர்லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகமும், ருத்ர பூஜையும் செய்து பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்கினார்.
இந்நிகழ்வை முன்னிட்டு இசைப்பள்ளி மாணவர்கள் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதிர்லிங்கத்தை தரிசித்து சிவனின் அருளை பெற்றனர்.


