
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் சூரியன் உதயமாகும் காட்சியை காண மக்கள் குவிய தொடங்கினார்கள்.
மழை மேகம் கலையாமல் தொடர்ந்து நீடித்ததால் கன்னியாகுமரி கடற்கரைக்கு சூரிய உதயம் காண வந்த சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து கடலில் ராச்சத அலைகள் எழும்ப பட்ட நிலையில் பயணிகள் கடலில் இறங்கி குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.



