H. Raja:விசிக மது ஒழிப்பு மாநாடு என்பது அரசியல் மோசடி : கொந்தளித்த எச்.ராஜா!

Advertisements

மதுக்கடைகளை திறந்தவர்கள்தான் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று எச்.ராஜா கூறினார்.

புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் தமிழக பாஜக பொறுப்பாளர் எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

காந்தி ஜெயந்தி முன்னிட்டு எப்படியாவது தமிழகத்தில் குறிப்பாகப் பெண் வாக்காளர்களைக் கருத்தில் கொண்டு திசை திருப்பும் விதமாகவும் குற்றவாளிகளைக் காப்பாற்றும் விதமாகவும் ஒரு கட்சி இன்று மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறது. தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள திமுக அரசு 500 மதுபான கடைகளை மூடுவேன் என்று சொல்லிவிட்டு ஆயிரம் தனியார் கிளப்புக்கு அனுமதி அளித்துள்ளனர்.

இவ்வாறு மதுவை ஊக்குவிக்கும் திமுக அரசின் பிரதிநிதிகள் விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள் என்றால் இது யாரை ஏமாற்றும் செயல். இது மது ஒழிப்பு மாநாடா? அல்லது மது உற்பத்தியாளர்கள் விற்பனையாளர்கள், மது பிரியர்கள் மாநாடா?.

கள்ளக்குறிச்சியில் 65 பேர் உயிரிழந்த சம்பவத்தில் வெட்கமே இல்லாமல் இந்த ஆண்டு 1,700 கோடி ரூபாய் மதுக்கடை மூலம் அதிக வருமானம் வந்துள்ளது என்பது திமுக கூறியிருப்பது வெக்கக்கேடான விஷயம். மதுக்கடைகளை திறந்தவர்கள்தான் மதுக்கடைகளை மூட வேண்டும். மது ஒழிப்பு மாநாடு என்பது அரசியல் மோசடி மாநாடு; மக்களை ஏமாற்றுகிற மாநாடு.

திமுக அரசு பொறுப்பேற்ற பின் அறநிலைத்துறை மூலம் புனரமைப்பு செய்யப்பட்ட கோவில்களைக் கள ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழ்நாட்டில் நடைபெற்ற கோவில் புனரமைப்பு பணிகளில் பெரும்பாலும் ஊழல் நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *