80-வது சுதந்திர தினம் – நாடு முழுவதும் தேசியக் கொடி ஏற்றி தலைவர்கள் மரியாதை!

Advertisements

நாட்டின் எண்பதாம் ஆண்டு விடுதலை நாளையொட்டி மத்திய அமைச்சர்களும், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களும் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

நாடு விடுதலை பெற்றதன் எண்பதாம் ஆண்டுக் கொண்டாட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதையொட்டிக் கொல்கத்தாவில் நடைபெற்ற விழாவில் மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கோல்கொண்டா கோட்டையில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் முதலமைச்சர் உமர் அப்துல்லா தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

மும்பையில் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தில்லியில் நடைபெற்ற விழாவில் மத்தியக் கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோசி தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இதேபோல் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *