
காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக செயல்படும் உள்ளூர் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை இஸ்ரேல் ஒப்பு கொண்டுள்ளது . இந்த நடவடிக்கை மூலம் காசாவில் குற்ற செயல்களை மேற்கொள்வோருக்கு இஸ்ரேல் ஆயுதங்கள் வழங்கி வருவதாக விமரிசிக்கப்படும் வகையில் இஸ்ரேல் அரசு அதை உறுதி படுத்தி உள்ளது . இது குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காஸாவின் தெற்கு பகுதியில் ஒரு குறிப்பிட்ட குழுவுக்கு ஆயுதங்கள் வழங்க பிரதமர் நெதன்யாகு அனுமதி அளித்தார். இந்தக் குழு, யாசர் அபு ஷபாப் தலைமையில் செயல்படு குழுவாகும். ஹமாஸ் படையினருக்கு எதிராக அந்த அமைப்பு செயல்படுகிறது.
இவற்றில் சில ஹமாஸிடமிருந்து கைப்பற்றப்பட்டவை. ஹமாஸை பலவீனப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபு ஷபாப் குழுவின் செயல்பாடுகள் காஸாவில் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஹமாஸின் ஆயுதப் பிரிவு, அபு ஷபாப் குழுவின் உறுப்பினர்களை குறிவைத்து படுகொலை செய்யத் தொடங்கியதாக அரபு நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.காஸா ஆயுதக் குழுக்களுக்கு இஸ்ரேல் அரசே ஆயுதங்கள் வழங்கும் முடிவுக்கு இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியின் தலைவர் யாயிர் கோலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை இஸ்ரேலின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார். காஸா குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது.இஸ்ரேல் அரசின் இந்த நடவடிக்கை காஸாவின் சிக்கலான மோதல் சூழலை மேலும் மோசமாக்கும் என்று அஞ்சப்படுகிறது.இந்த நடவடிக்கை தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிப்பதாக எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் எச்சரித்துள்ள நிலையில், முற்றுகையிடப்பட்ட பகுதியில் ஹமாஸை எதிர்கொள்ளும் முயற்சியில் இஸ்ரேல் காசாவில் உள்ள உள்ளூர் போராளிகளை ஆயுதம் ஏந்தச் செய்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை இரகசிய நிறுவனத்தை ஆதரித்து, அதை “ஒரு நல்ல விஷயம்” என்று அழைத்தார். சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், இஸ்ரேல் “காசாவில் ஹமாஸை எதிர்க்கும் குலங்களை செயல்படுத்தியுள்ளது” என்றும், அது “பாதுகாப்பு கூறுகளின் ஆலோசனையின் பேரில்” செய்யப்பட்டது என்றும் நெதன்யாகு கூறினார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் நெதன்யாகுவின் போட்டியாளருமான அவிக்டோர் லிபர்மேன் இஸ்ரேலின் சோவின் நடவடிக்கையை வெளிப்படுத்தினார். 12 நியூஸ் புதன்கிழமை, காசாவில் உள்ள தீவிரவாத குழுக்களுக்கு இஸ்ரேல் துப்பாக்கிகளை விநியோகித்து வருவதாகவும், இந்த நடவடிக்கையை “முழுமையான பைத்தியக்காரத்தனம்” என்றும் விவரித்தது.



