மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

Advertisements
சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 4 ஆண்டுகள் இன்றுடன் நிறைவு செய்து, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி தி.மு.க. அரசின் 4 ஆண்டு சாதனையை மக்களிடம் கொண்டு சேர்க்க தி.மு.க. தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், முதலமைச்சராக 5-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மெரினாவில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சருடன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *