இன்று நள்ளிரவு முதல் அமல் : தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் மீதான இறக்குமதி வரி உயர்வு…!

Advertisements
தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 10 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
மத்திய கிழக்கில் போர் நிலவி வருவதால் பிரதமர் மோடி, மக்கள் தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில், மத்திய அரசு தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
இதில், தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் மட்டுமின்றி, நகைகளுக்கான உதிரிபாகங்கள் மற்றும் விலைமதிப்புள்ள உலோகங்கள் தொடர்பான தொழில்துறை இறக்குமதிகள் மீதான வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, தங்கம் மற்றும் வெள்ளி நகைகளில் உள்ள கொக்கிகள், பிணைப்புகள், பிடிப்பான்கள், ஊசிகள் மற்றும் திருகுப் பின்புறங்கள் போன்ற சிறிய பாகங்களுக்கு 5 சதவீத சுங்க வரியும், பிளாட்டினம் பாகங்களுக்கு 5.4 சதவீத வரியும் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த உத்தரவு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *