காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 115 பேர் பலி..!

Advertisements
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 115 பேர் பலியாகிவுள்ளனர். காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இஸ்ரேலிருந்து 251 பேரைப் பணயக் கைதிகளாகக் காசா முனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றனர்.
பின்னர் ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையியிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.
பின்னர் பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. மேலும் தற்போதைய நிலவரப்படி ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 50 பேர் பணய கைதிகளாக உள்ளனர்.
இதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ஒழிக்கவும், நோக்கி காசா முனையில் இஸ்ரேல் தொடர்ந்து தரைவழி, வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.  இந்த தாக்குதலில் 115 பேர் உயிரிழந்தனர்.
இதன் மூலம் இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆயிரத்து 895 ஆக அதிகரித்துள்ளது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *