
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டியில் மார்ட்டின் லான்டலூசை வீழ்த்தி ஜுவான் மேனுவல் செரன்டலோ வெற்றி பெற்றுள்ளார்.
பிரான்சு தலைநகரமான, பாரிசில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் அர்ஜென்டினாவின் ஜுவான் மேனுவல் செரன்டலோ, ஸ்பெயினின் மார்ட்டின் லான்டலூஸ் உடன் மோதினார்.
இதில், சிறப்பாக விளையாடிய ஜுவான் மேனுவல் செரன்டலோ 3 -2 என்ற செட் கணக்கில் மார்ட்டின் லான்டலூசை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம், ஜுவான் மேனுவல் செரன்டலோ நான்காவது சுற்றுப் போட்டிக்கு முன்னேறினார்.



