
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவாலி அடுத்த சிரிபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி வனிதா. சுரேஷின் நண்பர்கள் யோகுலு, வெங்கடேஸ்வர் மற்றும் 4 பேர் உட்பட 8 பேரும் நேற்று தெலுங்கானா மாநிலம், கொண்ட கட்டு பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்குக் காரில் சென்றனர்.
காரில் வீட்டுக்குப் புறப்பட்டு வந்தனர். பல்நாடு மாவட்டம் பிராமண பள்ளி அடுத்த நார்கட் பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் கார் வேகமாக வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் சுரேஷ் அவரது மனைவி வனிதா, யோகலு, வெங்கடேஸ்வர் ஆகியோர் விபத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
போலீசார் படுகாயம் அடைந்த மேலும் 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்துகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



