Chennai:தலைமைச் செயலகத்தில் அதிர்வு? ஓட்டம் பிடித்த ஊழியர்கள்!

Advertisements

சென்னை தலைமைச் செயலகத்தில் திடீரென அதிர்வு உணரப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அனைவரும் வெளியேறியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள முதல் தளத்தில் டைல்சில் விரிசல் ஏற்பட்டுள்ளது. விரிசலை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் வெளியே ஓடி வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வெளியே ஓடி வந்த ஊழியர்களிடம் ஒரு பிரச்சனையும் கிடையாது, அச்சம் எதுவுமின்றி உள்ளே செல்லுங்கள் என்று காவல் துறையினர் அறிவுறுத்தினர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *