
அரூரில் அலங்கரிக்கப்பட்ட டிராக்டர்களில் உழவு கருவிகளுடன் நடைபெறும் உழவர்கள் பேரணியை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிதொடங்கி வைத்து டிக்ட்டரை ஓட்டிச் சென்றார்.அப்போது அ.தி.மு.கத்தொண்டர்கள் உற்ச்சாக வரவேற்பளித்தனர்.
தருமபுரி மாவட்டம் அரூரில் கொங்கு பல்நோக்கு பயிற்சியகம் கொங்கு இளைஞர்களுக்கு அர்ப்பணிக்கும் பெருவிழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அலங்கரிக்கப்பட்ட டிராக்டர்களில் உழவு கருவிகளுடன் நடைபெறும் உழவர்கள் பேரணியை தொடங்கி வைத்து டிக்ட்டரை ஓட்டிச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து கொங்கு பல்நோக்கு பயிற்சி ஆலயத்தைத் திறந்து வைத்தார். இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, கே.சி. கருப்பண்ணன், கே.பி.அன்பழகன் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
அரூரில் அலங்கரிக்கப்பட்ட டிராக்டர்களில் உழவு கருவிகளுடன் நடைபெறும் உழவர்கள் பேரணியை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிதொடங்கி வைத்து டிக்ட்டரை ஓட்டி சென்றார்.அப்போது அ.தி.மு.க தொண்டர்கள் உற்ச்சாக வரவேற்பளித்தனர்.

