தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் – வானிலை ஆய்வு மையம்!

Advertisements

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. காலை நேரத்தில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

தமிழகத்தில் 7 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் (19-02-2025) பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2° – 3° செல்சியஸ் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. காலை நேரத்தில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 20 முதல் 24ம் தேதிவரை வறண்ட வானிலை நிலவக்கூடும். சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2° – 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *