‘டிராமா மாடல்’ அரசு எதற்கு முன்னுரிமை கொடுக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது- அண்ணாமலை!

Advertisements

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, பிரியாணி கடை, டீக்கடையென வரிசையாக மன்னிப்பு கேட்கச் சென்ற மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தபின்னர், தென் தமிழகம் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானபோது கூட, அதைக் கண்டுகொள்ளாமல், இந்திக் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த டெல்லிக்குச் சென்றதை பொதுமக்கள் மறந்துவிடவில்லை.

தமிழகத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், வேங்கைவயல் பிரச்சனை தொடங்கி, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்முறை உட்பட, பொதுமக்கள் சந்தித்த பல்வேறு பிரச்சனைகளின்போது, அங்குச் சென்று ஆறுதல் கூறாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது, பிரதமர் மோடி விவசாயிகள் நலனுக்காக, மதுரை டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ததும், தி.மு.க. ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக உடனடியாகக் கிளம்பிச் செல்கிறார் என்றால், இந்த “டிராமா மாடல்” அரசு எதற்கு முன்னுரிமை கொடுக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *