Advertisements

இந்தியா மீதான 25 சதவீத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.
ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருவதைக் கண்டித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முதலில் 25 சதவீத வரியையும், பின்னர் கூடுதலாக 25 சதவீத வரியையும் விதித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிராக இந்தியா மீது விதித்த 25 சதவீத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உத்தரவின் மூலம் இந்தியா மீது இருந்த வரி தற்போது 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
Advertisements


