
விஜய் பேச்சு சினிமா பாணியில் இருந்ததாகத் திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி கூறியுள்ளார்.
சென்னை:தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்த இந்த மாநாட்டில் பேசிய விஜய், ‘பிளவுவாத சக்தியும், ஊழலுமே நம் எதிரிகள், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிப்போம்’ மேலும் தமிழகத்தில் திராவிட மாடல் என்று ஏமாற்றி ஒரு குடும்பத்தினர் கொள்ளையடித்து வருவதாகத் தாக்கிப் பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இது தொடர்பாகத் திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி கிண்டலாக ஒரு டுவீட் செய்துள்ளார். விஜய் பேச்சு சினிமா பாணியில் இருந்ததாகவும் இந்தப் படம் கூட 100 நாள் ஓடும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
“உடல் புல்லரிப்போடு நடிகர் விஜய் நடித்த வி.சாலை படம் பார்த்தேன்!! குட் பிலிம்.. 100 நாள் திரையரங்கிளும்!! ஓடிடியில் கொஞ்சநாளும் ஓடும்!.. வாழ்த்துகள் விஜய்” என்று பதிவிட்டுள்ளார். மேலும், அவர் விஜய்யின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தையும் அதில் டேக் செய்துள்ளார்.


