திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறாரா வைகோ? உடையும் அரசியல் ரகசியம்.!

Advertisements

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) மிக முக்கியமான பொதுக்குழு கூட்டம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் வரும் ஜூன் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த கூட்டம் மதிமுகவின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

தற்போது திமுக கூட்டணியில் நீடித்து வரும் மதிமுக-வுக்கு, கூட்டணியில் உரிய முக்கியத்துவம் மற்றும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதில் சில இழுபறிகள் நீடிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, “திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதா? அல்லது மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுப்பதா?” என்பது குறித்து இந்தப் பொதுக்குழுவில் வைகோ விரிவாக ஆலோசனை நடத்தவுள்ளார்.

மறுபுறம், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்க வேண்டும் என்று மதிமுகவின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களும், இளம் நிர்வாகிகளும் வைகோவிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். புதிய அரசியல் மாற்றத்தை நோக்கி நகர்வதே கட்சிக்கு நல்லது என அவர்கள் அழுத்தம் கொடுத்து வருவதால், ஜூன் 27 பொதுக்குழுவில் மதிமுக தனது அதிரடி அரசியல் நிலைப்பாடு குறித்த மிக முக்கிய முடிவை அறிவிக்கும் என அரசியல் வட்டாரங்களில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *