இன்று திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

Advertisements

திருச்செந்தூர்:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 14-ந் தேதி தைப்பொங்கல் தொடர் விடுமுறையிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வந்தனர்.

இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடிப் பல மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தும், காவடி, பால்குடம் எடுத்து வந்தும் சாமி தரிசனம் செய்தனர்.

இன்று முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது. சுப முகூர்த்தம் மற்றும் விடுமுறை நாள் என்பதால் கோவில் வளாகம் மற்றும் கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

வழக்கம்போல் அதிகாலை 5மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

இன்று நடைபெற்ற தை உத்திர வருஷாபிசேகத்தை முன்னிட்டு காலை 7மணியில் இருந்து காலை 9 மணிவரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை. இதனால் ஏராளமான பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *