
இன்று ஜூன் 21 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு குடியாத்தம் அருகே காக்காதோப்பு பகுதியில் உள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியில் யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.. இதில் , பாஜக முன்னாள் மாநிலத் தலைவர், பாஜக மூத்த நிர்வாகி டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுடன் யோகாசனம் மேற்கொண்டார்..
பின்னர் செய்தியாளிடம் பேசிய அவர் பெண்கள் பாதுகாப்பில் முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும் . ஏற்கனவே ஆர்ப்பாட்டமும் செய்திருக்கிறோம் . அதனால் பெண்கள் பாதுகாப்பில் முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும். ஒரு மாத ஆட்சி குறித்த கேள்விக்கு
ஒரு மாதம் தான் ஆகிறது பெண்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் .வெள்ளை அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.
ஆளுநர் உரை ஆரோக்கியமாக சென்றிருக்கிறது ஆளுநர் உரை அமைதியாக எந்த எதிர்ப்பும் இல்லாமல் இருந்ததாக ஆளுநரே சொல்லி இருக்கிறார்.. முழுமையான ஆளுநர் அறிக்கை வாசித்தது மகிழ்ச்சி என்று ஆளுநரே கூறியிருந்தார். அரசின் அறிக்கை தான் ஆளுநர் உரையில் கூறியிருக்கிறார்.
அதை தமிழக அரசும் நிறைவேற்ற வேண்டும். மேகதாது நமது உரிமை காங்கிரஸ் கட்சி சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் இங்கு உள்ளார்கள் அவர்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறார்களா இல்லையென்றால் இந்த இரண்டு அமைச்சர்களும் மேகதாதுவை தடுக்க முடியவில்லை என்றவர்கள் அவர்கள் நிலை என்ன இதில் காங்கிரஸின் இரட்டை வேடம் தெரிந்துள்ளது எனச் செய்தியாளர்களும் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார் இதில் ஆசீர்வாத் கல்வி நிலையங்களின் தலைவர் மஞ்சுநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்..



