Advertisements

தமிழகத்தில் இப்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கும் விஜய் எல்லாவற்றையும் சரி பண்ணுவார் என்று பாடகர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
குருபரிகாரத் தலங்களில் முதன்மையான திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோவிலில் திரைப்படப் பாடகர் வேல்முருகன் வழிபாடு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளைஞர்கள், பெரியவர், தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோரிடம் ஒரு மிகப்பெரிய புகழுடைய உச்ச நடிகராக இருந்த விஜய், தமிழகத்தின் முதலமைச்சராகவும் சிறப்பாகச் செயல்படுவதாகத் தெரிவித்தார்.
Advertisements



