10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆலோசனை!

Advertisements

தமிழகத்தில் வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. தற்போது இதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் பொதுத்தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வருகிற 13-ந் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் துறை சார்ந்த இயக்குநர்கள், முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

கூட்டத்தில் பொதுத்தேர்வை சிறந்த முறையில் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காதபடி நடத்தி முடிப்பதற்கான செயல்பாடுகள் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளன என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *