சிக்கன் ரைஸ் , க்ரில் சிக்கனில் சேர்க்கப்படும் நிறமிகள்..வெளியான அதிர்ச்சி தகவல்!

Advertisements

ஜிலேபி, சர்பத், மிட்டாய், க்ரில் சிக்கன் , சிக்கன் ரைஸ் உட்பட உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் நிறமிகளால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாகவும், இத்தகைய ஆபத்தான நிறமிகளை அரசு உடனடியாக தடைசெய்ய வேண்டும் என்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாகவே வீட்டில் தயாரிக்கும் மாவு உட்பட அனைத்திலும் கலப்படம் தான் . சமீப காலமாகவே சிக்கன் ரைஸ் மற்றும் க்ரில் சிக்கன் , சிக்கன் பிரியாணி உள்ளிட்ட உணவு பொருட்களில் சுவைக்காக பல்வேறு நிறமிகள் சேர்க்கப்படுகிறது .

இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்காவில், உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் 8 நிறமிகள் தடைசெய்யப்பட்டன. இந்நிலையில், இந்தியாவிலும் இத்தகைய குரல்கள் வலுவாக எழுத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, சிவப்பு 3, சிவப்பு 40, மஞ்சள் 5 ஆகிய வகை நிறமிகளை உடனடியாக தடைசெய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *