சட்டப்பேரவையில் விஜய்க்கு புகழாரம் – ஆதவ் அர்ஜுனா, நேரு பதிலடி!

Advertisements
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கட்சித் தலைவர்களைப் புகழ்ந்து பேசுவது வழக்கமாக உள்ள நிலையில், இன்றைய கூட்டத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டிப் பேச முயன்றதாகக் கூறிப் பேசிய விவகாரம் அவையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
அவையில் உரையாற்றிய தவெக எம்.எல்.ஏ ரெட்டியார்பட்டி நாராயணன், “பாரிக்கரையிலே மண்டபம் ஒன்றை வளர்ந்து நாரியர்கள் கூடி நாடெங்கும் வாசமிட்டு ஒரு குடைக்குள் ஆள்வாய் உன் காலம் என் மகனே” என்ற வரிகளைப் பாடி, முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறமையைப் புகழ்ந்து பேசினார்.
உறுப்பினரின் இந்தப் புகழுரைக்குப் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடனடியாகக் குறுக்கிட்டுக் கண்டனம் தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், “நம்முடைய முதல்வர் விஜய் மற்ற முதல்வர்களைப் போல் அல்ல; அவருக்குப் புகழாரம்  கொஞ்சமும் பிடிக்காது. எனவே, உறுப்பினர்கள் தங்களது தொகுதி சார்ந்த தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மட்டுமே பேச வேண்டும். சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்கள் தொகுதிப் பிரச்சினைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்று கண்டிப்புடன் கேட்டுக் கொண்டார்.
அமைச்சரின் இந்தக் கருத்தைத் தொடர்ந்து எழுந்து பேசிய முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், “முதல்வருக்குப் புகழ்ச்சி பிடிக்காது என்று அமைச்சர் சொல்வதை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளுகிறோம். ஆனால், ‘மற்ற முதல்வர்களைப் போன்று எங்கள் முதல்வர் இல்லை’ என்று கூறுவதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் புகழ்ச்சி பிடிக்கவே பிடிக்காது. சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் தங்களைப் புகழ வேண்டாம் எனப் பேரவையிலேயே எழுந்து நின்று கண்டிப்புடன் சொன்னவர் தான் தலைவர் மு.க.ஸ்டாலின்” என்று சுட்டிக் காட்டினார்.
தலைவர்களின் புகழ்ச்சி மற்றும் முந்தைய முதலமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த இந்த விவாதம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *