
தயாரிப்பாளர் வருண் மணியனுடனான திருமணத்தை நிறுத்தியது குறித்து த்ரிஷா கிருஷ்ணன் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசினார். அது பற்றி தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. கோலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையான த்ரிஷா கிருஷ்ணன் மே 4ம் தேதி தனது 42வது பிறந்தநாளை கொண்டாடினார். தனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னவர்களின் போஸ்ட்டுகளை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டு நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், த்ரிஷாவுக்கும், தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆனந்த கண்ணீர் விட்டார்கள். ஆனால் அந்த திருமணம் நடக்கவில்லை. இந்த திருமணம் நடக்காது என சொல்லிவிட்டார் த்ரிஷா. அதற்கான காரணத்தை அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அது குறித்து தற்போது ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
பேட்டி ஒன்றில் த்ரிஷா கூறியதாவது, என் திருமணத்தை நிறுத்திவிட்டேன். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்கக் கூடாது என்றார் எனக்கு கணவராக வரவிருந்தவர். ஆனால் நான் நடிப்பை நிறுத்துவதற்கு பதில் திருமணத்தை நிறுத்திவிட்டேன். கர்ப்பமானால் மட்டுமே பிரேக் எடுப்பேன். அதுவும் சினிமாவில் இருந்து விலகிவிட மாட்டேன் என்றார்.
நடித்தால் ஹீரோயினாக மட்டுமே நடிக்க வேண்டும் என த்ரிஷா நினைக்கவில்லை. இருந்தபோதிலும் அவரை தேடி ஹீரோயின் வாய்ப்புகளாக வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு த்ரிஷா கூறியதில், ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்காவிட்டால் என் இமேஜுக்கு ஏற்ற கதபாத்திரங்களில் நடிப்பேனே தவிர சினிமாவை விட்டு போக மாட்டேன். மூச்சு இருக்கும் வரை நடித்துக் கொண்டே இருப்பேன் என்றார்.
