தென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்!

Advertisements

சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது,

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை விடைபெற்றுள்ள நிலையில், நில நடுக்கோட்டையொட்டிய வங்கக் கடல் பகுதியில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக நாளை (வியாழக்கிழமை) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதே நாளில் வட தமிழகத்திலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் (31-ந்தேதி) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதே நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

பிப்ரவரி 1 மற்றும் 2-ந்தேதிகளிலும் வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை நகரைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். காலை நேரத்தில் பனிமூட்டம் இருக்கும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *