Actress Roja:ரூ 100 கோடி நிதி முறைகேடு! சிக்குகிறாரா நடிகை ரோஜா!

நகரி: நடிகை ரோஜா, சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தபோது ஆடுதாம் ஆந்திரா என்ற நிகழ்ச்சிக்காக ஒதுக்கிய ரூ 100 கோடி நிதியில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரியும் புகார் எழுந்துள்ளது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் நடிகை ரோஜா செல்வமணி. இவருக்குக் கடைசி இரண்டரை ஆண்டுகள் சுற்றுலா, விளையாட்டு, இளைஞர் நல மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது.

இவர் 3ஆவது முறை நகரி தொகுதியில் போட்டியிட்டு இந்த முறை படுதோல்வி அடைந்தார். ஆந்திராவில் ஜெகன்மோகன் ஆட்சி இருந்தபோது ஆடுதாம் ஆந்திரா எனும் நிகழ்ச்சி ஆந்திரா முழுவதும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி தோல்வி அடைந்தது.

ஆயினும் இந்த நிகழ்ச்சிக்காக ரூ 100 கோடியை ஜெகன்மோகன் அரசு ஒதுக்கியதாக அறிவித்திருந்தது. இந்தப் பணத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று ஆத்யா- பாத்யா அமைப்பிர் விஜயவாடா சிஐடி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் ரோஜாவிடம் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *