
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் ஜுன் 29, 30 ஆகிய தேதிகளில் ஐ.ஏ.எஸ்,ஐபிஎஸ், மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளுடனான இரண்டு நாள் மாநாடு நடைபெற உள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் ஜுன் 29, 30 ஆகிய தேதிகளில் ஐ.ஏ.எஸ்,ஐபிஎஸ், மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளுடனான இரண்டு நாள் மாநாடு நடைபெற உள்ளது. தவெக அரசு புதிதாக் பொறுப்பேற்றுள்ள நிலையில் முதல் முறையாக இந்த மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் அதிகாரிகளுடனான இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது..



