“தாய்மொழி தெரியலைன்னா அது அவமானம்!” நடிகர் தனுஷின் வைரல் பேச்சு.!

Advertisements

தான் பயின்ற பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் Dhanush, தாய்மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உரையாற்றினார்.

அவர் பேசுகையில், “ஒருவருக்கு தாய்மொழி தெரியாமல் இருப்பது ஒரு அவமானம். கண்டிப்பாக தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வெளிநாடுகளில்கூட தாய்மொழிக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆங்கிலம் தெரிந்திருப்பது கூடுதல் திறன்தான்; ஆனால் முதலில் தாய்மொழியை எழுதவும் படிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் தெரியாததை பெருமையாகக் கருதக் கூடாது” என்று தெரிவித்தார்.

மேலும், தாய்மொழி என்பது ஒரு மொழி மட்டுமல்ல; அது ஒருவரின் அடையாளம், பண்பாடு மற்றும் பாரம்பரியத்தின் அடித்தளம் என்றும் அவர் வலியுறுத்தினார். மாணவர்கள் தங்களது தாய்மொழியை மதித்து, சரளமாகப் பேசவும், எழுதவும், படிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

நடிகர் தனுஷின் இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, தாய்மொழியின் அவசியம் குறித்து மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *