
கடந்த சில மாதங்களாக வட கொரியா மீது அமெரிக்கா ஆயுத சோதனைகளை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவை எச்சரித்து அறிக்கை விடுத்துள்ளார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்.
சமீபகாலமாக சியோலும், வாஷிங்டனும் பியோங்யாங்கின் வரலாறு காணாத தொடர்ச்சியான ஆயுத சோதனைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரித்துள்ளன. இதனால் வட கொரியா தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பது மிக அவசியமான ஒன்றான சூழ்நிலையில் உள்ளோம் என்று கூறியுள்ளார் கிம் ஜாங் உன்.
பகைமைப் பாராட்டி வரும் தென் கொரியாவும், அமெரிக்காவும் இராணுவ மோதலை உண்டு பண்ணும் விதமாக செயல்படுகிறது. அப்படி அவர்கள் நடந்தால் நாங்களும் எங்கள் பலத்தை காண்பிக்க வேண்டியது இருக்கும். நாமும் வாளை கூர்மையாக்கும் சூழல் உருவாகும் என்று தெரிவித்துள்ளார். அதே சமயம் தனது நாட்டு ராணுவத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் சியோல் தாக்குதல் போக்கை தொடங்கினால் அவர்களுக்கு எதிராக அதிகபட்ச பலத்தைப் பயன்படுத்துமாறு வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் தனது உயர் இராணுவ அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பியோங்யாங்கில் வட கொரியாவின் முக்கிய உயர் அதிகாரிகளுடனான சந்திப்பில், கிம் தனது இராணுவம் தூண்டப்பட்டால் எதிரியை “அழிக்க வேண்டும்” என்று கூறியதாக அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் எதிரிகள் வட கொரியாவுக்கு எதிராக இராணுவ மோதல் மற்றும் அழிவுப் பாதையில் யல்படுமானால் அனைத்து கடினமான வழிமுறைகளையும் சாத்தியக்கூறுகளையும் அணி திரட்டுவதன் மூலம் அவர்களை முற்றிலுமாக அழிக்க நமது இராணுவம் ஒரு பலமான தாக்குதலை நடத்த தயாராக எதிர்கொள்ள வேண்டும்” என்று கிம் கூறினார்.
சியோல் மீதான அணுஆயுத தாக்குதல் குறித்த அவரது பேச்சு கட்சி கூட்டங்களின் போது அச்சுறுத்தல்கள் மற்றும் தீபகற்பத்தில் எந்த நேரத்திலும் நிகழும் ஒரு போருக்கு தயாராக ஒரு இராணுவ தளவாடத்தை கட்டமைக்க உத்தரவிடுதல் ஆகியவற்றை கிம்மின் கருத்துக்கள் தெரிவிக்கிறது.
மேலும் 2024 ஆம் ஆண்டிற்கான கூட்டம் ஒன்றில் பேசிய அவர் நிகழ்ச்சி நிரலை அமைப்பதற்கான கூட்டங்களின் போது, வட கொரிய தலைவர் அமெரிக்கா “பல்வேறு வகையான இராணுவ அச்சுறுத்தல்களை” முன்வைக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
தென் கொரியாவின் முழு நிலப்பரப்பையும் நசுக்குமாறு ஆயுதப் படைகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஒரு “பெரிய போர் தொடருமானால் அணுஆயுத படைகள் உட்பட, ஆயுத மோதலை சந்திக்க தயாராகி வருகிறது.
சியோல் மற்றும் வாஷிங்டனால் தூண்டப்பட்ட “கட்டுப்படுத்த முடியாத நெருக்கடி” என்று குறிப்பிட்ட கிம், தென் கொரியாவுடன் நல்லிணக்கம் மற்றும் ஒருங்கிணைப்பை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூட்டத்தில் கூறினார். தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் திங்களன்று பியோங்யாங்கின் இராணுவ தாக்குதலை நடத்தியது. 2024 இன் முதல் பாதியில் அவர்களின் சதி முறியடிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த தடுப்பு அமைப்பு “எந்தவொரு வட கொரிய அணுசக்தி மற்றும் ஏவுகணை அச்சுறுத்தலையும் அடிப்படையில் தடுக்கும்” என்று யூன் தனது புத்தாண்டு தின உரையில் கூறினார். 2023 ஆம் ஆண்டில், பியோங்யாங் ஒரு உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது, அதன் அரசியலமைப்பில் ஒரு அணுசக்தி சக்தி என்ற அந்தஸ்தை நிலைநிறுத்தியது மற்றும் அதன் ஆயுதக் கிடங்கில் மிகவும் மேம்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்தது.
ஒப்பற்ற அணுசக்தி சக்தியாக பிரகடனப்படுத்தியதுடன், அதன் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாததாக ஆட்சி கருதும் அதன் அணுஆயுதத் திட்டத்தை ஒருபோதும் கைவிட போவதில்லை என்று மீண்டும் கூறியுள்ளது.
2006 ஆம் ஆண்டில் பியோங்யாங் முதன்முதலில் அணுகுண்டு சோதனையை நடத்தியதிலிருந்து வட கொரியா அதன் அணு ஆயுத மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்களை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


