
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது,
* மத்திய பட்ஜெட்டை கண்டித்து தி.மு.க. சார்பில் நேற்று கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.
* தமிழகத்தில் நேற்று 72 இடங்களில் தி.மு.க. சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது.
* துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவத்தோடு உரையாற்றினார்.
* டெல்லியில் தி.மு.க. மாணவர் அமைப்பு நடத்திய போராட்டத்தில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்றனர்.
* மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டித் தமிழக எம்.பி.க்கள் போராடினர்.
* தமிழகத்தை வஞ்சிக்கக்கூடிய பட்ஜெட்டாக உள்ளது.
* பட்ஜெட்டில் மிகப்பெரிய துரோகத்தை மத்திய அரசு செய்துள்ளது.
* யுஜிசி புதிய வரைவு விதி மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் வகையில் உள்ளது.
* எல்லா வகையிலும் மத்திய அரசுக்குப் பொருள் ஈட்டித் தந்த தமிழகத்திற்கு ஏன் இந்த ஓரவஞ்சனை?
* ஆசிரியருக்குச் சம்பளம், 100 நாள் வேலைவாய்ப்பு என எதற்கும் நிதி தராது வஞ்சிக்கிறது மத்திய அரசு.
* உ.பி., பீகார், குஜராத் மாநிலங்களுக்குக் கேட்காமலேயே நிதி தருகிறது மத்திய அரசு.
* அளிக்க வேண்டி நிதியைக் கூட மத்திய அரசு இன்னும் அளிக்கவில்லை.
* அமெரிக்காவில் இந்தியர்களுக்கு ஏற்பட்ட அவமானத்தைக் கூடக் கண்டிப்பதற்கு பிரதமர் மோடி குரல் கொடுக்கவில்லை.
* நான் ஒரு தமிழச்சி தானெனக் கூறும் நிதியமைச்சர் நிர்மலா தமிழகத்திற்காகச் செய்தது என்ன?
* மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடிக்கிறார் என்று குற்றம்சாட்டினார்.
