BharatiyarUniversity:வீட்டு வேலை செய்யச் சொல்லுறாங்க.. பட்டமளிப்பு விழாவில் கவர்னருக்கு வந்த புகார் மனு!

Advertisements

கோவை: கோவை, பாரதியார் பல்கலையில் கவர்னரிடம் முனைவர் பட்டம் பெற்ற மாணவர் பிரகாஷ், பல்கலை முறைகேடுகள் தொடர்பாகக் கவர்னரிடம் மனுவும் கொடுத்தார்.

கோவை பாரதியார் பல்கலை 39வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிக் கவுரவித்தார். அப்போது, ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்று கொள்ள பிரகாஷ் என்ற மாணவன் மேடைக்கு வந்தார்.

அப்போது, அவர் கவர்னர் ரவியிடம் பல்கலை முறைகேடுகள் தொடர்பாகப் புகார் மனு அளித்தார். பி.எச்.டி., மாணவர்களிடம் முனைவர் பட்டம் பெற வழிகாட்டும் பேராசிரியர்கள் பணம் கேட்பதாக, பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

தனிப்பட்ட வேலைகளை, பேராசியர்கள் செய்யச் சொல்கிறார்கள். பல்கலையில் நடக்கும் முறைகேடுகளைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரகாஷ் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். கவர்னர் ரவி புகார் மனுவைப் பெற்றுக்கொண்டார். இதையடுத்து, முனைவர் பட்டத்துடன் கவர்னர் ரவியுடன் பிரகாஷ் போட்டோ எடுத்துவிட்டு மேடையை விட்டுக் கீழே இறங்கினார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *