சீமான் வீட்டை முற்றுகையிட்டவர்கள் கைது !

Advertisements

தந்தை பெரியார்குறித்த அநாகரிக பேச்சிற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுவரை ஆதாரம் அளிக்காததால் அவரது வீடு இன்று முற்றுகையிடப்படும் என்று தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவையற்ற பதற்றத்தை தவிர்க்கும் நடவடிக்கையாகச் சீமான் இல்லம் நோக்கிச் செல்வதற்கு நா.த.க.வினருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

இந்நிலையில் சீமான் வீட்டைப் பெரியாரிய உணர்வாளர்கள் முற்றுகையிட முயன்றனர். காவல் துறையினர் அமைத்த தடுப்புகளை மீறி அவர்கள் செல்ல முயன்றனர்.

மேலும், சீமான் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், உருவ பொம்மையை எரித்தும் பெரியாரிய உணர்வாளர்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து தடுப்புகளை மீறிச் செல்ல முயன்ற பெரியாரிய உணர்வாளர்களைப் போலீசார் கைது செய்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *