ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியை,தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் பொறுப்பிலிருந்து நீக்கம்

Advertisements

ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியை, தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் பொறுப்பிலிருந்து, நீக்கம் செய்து, கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக செயல்பட்டு வந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியை நியமித்து, அக்கட்சியின் மாநில தலைவரான ஆனந்தன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்த பொற்கொடி, மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் இனி கட்சி பதவிகளில் ஈடுபட மாட்டார் என்றும் தனது குழந்தையையும் குடும்பத்தையும் மட்டுமே இனி கவனித்துக் கொள்வார் என்றும், கட்சி தலைமை அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு மாநில தலைவர் ஆனந்தன் தலைமையில் தொண்டர்கள், பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும் என கட்சி தலைமை தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *