
வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை மத்திய அரசை கண்டித்து சமூக வலைதள பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுகள், சீரான தன்மையை உறுதிப்படுத்த வேண்டிய அமைப்பே தோல்வியுற்றதாகவும், இதற்கு காரணமானவர்களிடம் இருந்து எந்தப் பொறுப்புக்கூறலும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
போராட்டம் தீவிரமடையும் வரை மத்திய அரசு பேச்சுவார்த்தையைத் தாமதப்படுத்திய ஏன்? எனவும், சுயநலவாதிகள் போராட்டத்தைத் திசைதிருப்பும் முன், பாஜக தலைமையிலான மத்திய அரசு உடனடியாக மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தித் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.



