அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு – ஞானசேகரனின்!

Advertisements

அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாகச் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு உள்ளனர்.

ஞானசேகரனின் செல்போன் முக்கிய ஆதாரமாகப் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், திரட்டப்பட்ட ஆதாரங்களைப் போலீசார் முக்கியமாகக் கருதுகிறார்கள்.

கடந்த வாரம் ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை நடத்தப்பட்டது. 3 மணி நேரம் நீடித்த இந்தப் பரிசோதனையில் பல கோணங்களில் அவரைப் பேச வைத்துக் குரலைப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை செய்யச் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *