
அமெரிக்காவில் ஏல மையத்தில் ஏலம் விட வைக்கப்பட்டுள்ள டைனோசர் எலும்புக்கூடு, செவ்வாய் கிரகத்தைச் சேர்ந்த விண்கல் ஆகியவை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.
நியூயார்க் நகரில் உள்ள சவுத்பே ஏல நிறுவனம், பல்வேறு விலை உயர்ந்த மற்றும் அரிய பொருட்களை ஏலத்துக்கு விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
அந்த வகையில், 15 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்ததாக கூறப்படும் சிறிய டைனோசரின் எலும்புக்கூடு ஒன்றும், சகாரா பாலைவனத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்து விழுந்த விண்கல்லும் ஏலம் விடப்படவுள்ளன.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சவுத்பே ஏல நிறுவனத்தின் துணைத் தலைவர் கசாண்ட்ரா ஹத்தான் (Cassandra Hatton), ஏலம் விடப்படவுள்ள டைனோசர் எலும்புக்கூடு உலகில் தோன்றிய நான்கு டைனோசர்களில் ஒன்று என்றும், மீதமுள்ள மூன்று அருங்காட்சியகத்தில் உள்ளதாகவும் கூறினார்.




