விஜய்–சங்கீதா வழக்கு.. ஜூன் 15 விசாரணை : விஜய் நேரில் வருவாரா.. ?

Advertisements

திரையுலகையும், தமிழக அரசியலையும் ஒருசேர உலுக்கியுள்ள செய்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு. கடந்த சில மாதங்களாக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த விவகாரம், தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

27 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, கடந்த பிப்ரவரி மாதம் சங்கீதா சோர்ணலிங்கம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். தனது மனுவில், விஜய் தன்னிடம் இருந்து உணர்வுப்பூர்வமாக விலகி இருப்பதாகவும், குடும்ப வாழ்க்கையில் தன்னைத் தனிமைப்படுத்தி வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், விவாகரத்து முடியும் வரை தனது ஈசிஆர் (ECR) இல்லத்திலேயே தங்குவதற்கு உரிமை கோரி இடைக்கால மனுவையும் தாக்கல் செய்தார்.பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை நடந்த விசாரணைகளில், விஜய் அல்லது சங்கீதா ஆகிய இருவருமே நேரில் ஆஜராகவில்லை. இருவரும் தங்கள் வழக்கறிஞர்கள் மூலமாகவே வாதங்களை முன்வைத்தனர்.

கடந்த ஏப்ரல் 20-ம் தேதி நடந்த விசாரணையின் போது, இருவரும் நேரில் வராததால் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
இந்த வழக்கினைத் தொடக்கம் முதலே விசாரித்து வந்த நீதிபதி சசிகலா தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது ஒரு வழக்கமான நடைமுறை என்றாலும், உயர்மட்ட வழக்கு என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.

அவருக்குப் பதிலாக, ஏற்கனவே செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்ட நீதிபதி சுஜாதா மீண்டும் அதே பொறுப்பில் நியமிக்கப்பட்டு உள்ளார். இனிவரும் விசாரணைகளை இவரே நடத்துவார்.நீதிமன்றம் இந்த வழக்கை வரும் ஜூன் 15, 2026-க்கு ஒத்திவைத்து உள்ளது.

அன்றைய தினம் விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி சசிகலா தனது இறுதி உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். புதிய நீதிபதி சுஜாதா பொறுப்பேற்ற பிறகு, இந்த உத்தரவில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா அல்லது விஜய் நேரில் ஆஜராவாரா என்பது ஜூன் மாதம் தெரியும். விஜயின் அரசியல் பயணத்தில் அவர் கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறார்.

இந்நிலையில், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் இத்தகைய சம்பவம் நடைபெற்று இருப்பது அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.விஜய் தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியைத் தொடங்கி, தீவிர அரசியல் களப்பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த விவாகரத்து வழக்கு அவருக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கட்சித் தொண்டர்கள் மத்தியில் இது பேசுபொருளாக இருந்தாலும், விஜய் தரப்பில் இதுகுறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.தனிப்பட்ட வாழ்க்கைக்கும் அரசியலுக்கும் இடையே விஜய் இந்தச் சூழலை எப்படிக் கையாளப் போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

ஜூன் 15-ம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றம் இந்த வழக்கின் போக்கை மாற்றும் ஒரு முக்கியத் தினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *