
நடிகர் அஜித் – ஷாலினி இணையின் புகைப்படங்கள் தற்போது இணையத்தைக் கலக்கி வருகிறது.
நடிகர் அஜித் குமார் மலேசியாவில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் தன் குழுவினருடன் கலந்துகொண்டார். இப்பந்தயத்தைக் காண மலேசியா, சிங்கப்பூரிலுள்ள பல தமிழ் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர். இதையடுத்து, பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் குடும்பத்தினரும் வந்திருந்தனர். இந்நிலையில், அங்கு நடிகர் அஜித் குமார் தன் மகன் ஆத்விக்கையும் கட்டியணைத்தது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட அஜித் – ஷாலினி இணையின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.



