
ஆப்கானிஸ்தானின் டிரோன் தாக்குதல் எதிரொலி காரணமாக நாடு முழுவதும் டிரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதன்காரணமாக, பாகிஸ்தான் வெளிப்படையாக போர்ப் பிரகடனம் செய்து, ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், இரு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் டிரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


