
ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! 2000-ஆயிரம் பேர் பலி.
ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிகடர் அளவுகோளில் 6.5 ஆக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தில் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
ஜிண்டாஜன், கோர்யான் மாவட்டங்களில் 6.5 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளது. இதில் 465-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாக நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 12 கிராமங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் பரா பஃதீஸ் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. மீட்பு பணிகளில் அரசு ஈடுபட்டு வருவதாக தகவல் வெளீயாகியுள்ளது.



