Actor Ranjith:கள்ளச்சாராயத்தை இவர்களால் ஒழிக்கவே முடியாது!

Advertisements

நடிகர் ரஞ்சித் அவர்கள் இயக்கி நடித்திருக்கும் படம் குழந்தை C/O கவுண்டம் பாளையம். இந்தப் படம் ஜூலை 5 முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் கோவையில் நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது கூறியதாவது:

தேர்தல் வர 20 மாதங்கள் தான் உள்ளது. அதனால் 10 லட்சம் என்ன போட்டி போட்டு ஒரு ஆளுக்கு 1 கோடி கூடக் கொடுக்க வாய்ப்பு உள்ளது.கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த உயிர்களைப் பார்க்கும்போது வருத்தமாக உள்ளது.

கள்ளச்சாராயம் குடித்து இறந்துவிட்டதாகக் கோபப்படுகிறீர்கள். நம் நாடு, தெரு முழுக்க மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பது தவறாகத் தெரியவில்லையா. இவன் இப்பவே செத்து விடுவான். இவன் 5 வருடம் கழித்து சாவான். இது ஸ்லோ பாஸ்சன்.

உங்களால் கள்ளச்சாராயத்தை எல்லாம் ஒழிக்கவே முடியாது. உங்களால் பிளாஸ்டிக் பாட்டிலை ஒழிக்க முடிந்ததா… எப்படி கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும்.

இது யாருக்கும் தெரியாமலோ, அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களுக்குத் தெரியாமலோ நடந்திருக்காது.

இது எவ்வளவு வருத்தப்படக்கூடிய சம்பவம். இன்றைக்கு காலையில் எங்காவது விற்றுக்கொண்டிருப்பார்கள். இது முடிந்து விட்டதாக நினைக்காதீர்கள். இப்போதும் எங்காவது சரக்கு ஓடிக்கொண்டிருக்கும் என்று கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *