
26 வாரக் கர்ப்பத்தை கலைக்கக் கோரிய மனுமீது உச்ச நீதிமன்றத்தின் அதிர்ச்சி தீர்ப்பு.
திருமணமான பெண்ணின் 26 வாரக் கர்ப்பத்தை கலைக்க அனுமதித்து உச்ச நீதி மன்றம்தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையின் மீது உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு புதன்கிழமை அதிர்ச்சிகரமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை இதுகுறித்து விவாதம் வந்தபோது பாதிக்கப்பட்ட பெண் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், உணர்ச்சி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும் மூன்றாவது குழந்தையை வளர்க்கும் நிலையில் இல்லை என்பதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு, கர்ப்பத்தை மருத்துவ ரீதியாகக் கலைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்ததாக உச்சநீதிமன்ற தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

